இலங்கையில் அதிபராக சிறிசேனாவும், பிரதமராக ரணில் விக்ரமங்சிங்கேவும் உள்ளனர். இந்நிலையில் கடந்த வாரம் ரணிலை பிரதமர் பதவியில் இருந்து நீக்கிய சிறிசேனா, ராஜபக்சேவை பிரதமராக நியமித்து பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதனால் இலங்கை அரசில் பெரும் குழப்பம் ஏற்பட்டது.
நான்தான் இன்னும் இலங்கையின் பிரதமர் என்று கூறிய ரணில், விரைவில் பாராளுமன்றத்தை கூட்ட வேண்டும் என்று வலியுறுத்தினார். ஆனால் சிறிசேனா பாராளுமன்றத்தை முடக்கும்படி உத்தரவிட்டார். இது சபாநாயருக்கு அதிருப்தியை ஏற்பட்டது.
கோப்புப்படம்