செய்திகள்

இலங்கை குண்டுவெடிப்பு- வர்த்தக அமைச்சர் ரிஷாத் பத்யுதீன் சகோதரர் கைது

இலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தில் வர்த்தக அமைச்சர் ரிஷாத் பத்யுதீன் சகோதரர் கைது செய்யப்பட்டார். #srilankablast

மாலை மலர்

இலங்கை

கொழும்புவில் ஈஸ்டர் தினத்தில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு தாக்குதலில் 350-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இச்சம்பவம் தொடர்பாக குற்றப்பிரிவு போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகிறார்கள்.

இதற்கிடையே பாதுகாப்பு படையினர் சந்தேகத்திற்கு இடமானவர்களை கைது செய்து வருகிறார்கள். சுமார் 70-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு நகரம் முழு பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. 

இலங்கையில் குண்டு வெடிப்பு சம்பவங்கள் தொடர்பாக வர்த்தக அமைச்சர் ரிஷாத் பத்யுதீனின் சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் விசாரணை நடக்கிறது என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் கைது செய்யப்படவில்லை என ரிஷாத் மறுப்பும் தெரிவித்துள்ளார். #srilankablast