செய்திகள்

பதக்கம் வென்ற வீரர்களின் பென்சன் இரண்டு மடங்காக உயர்வு- விளையாட்டுத்துறை அமைச்சகம்

சர்வதேச அளவில் சாதனைப் படைத்து பதக்கம் வென்ற வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கான பென்சன் தொகை இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது.

மாலை மலர்

வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் ஓய்வு பெற்றபின் அவர்களுக்கு ஓய்வு ஊதியமும் வழங்கப்படும். தற்போது அந்த ஓய்வூதியம் இரண்டு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதுவரை ஒலிம்பிக் தொடரில் பதக்கம் வெல்லும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் பென்சனாக வழங்கப்பட்டு வந்தது. தற்போது மாற்றப்பட்டுள்ள பென்சன் கொள்கையின்படி 20 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். பாராலிம்பிக்ஸில் வெல்லும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கும் இதே தொகை வழங்கப்படும்.

உலகக்கோப்பை, ஆசிய போட்டியில் தங்கம் வெல்லும் நபர்களுக்கு 16 ஆயிரம் ரூபாயும், வெள்ளிப் பதக்கம் வெல்லும் நபர்களுக்கு 14 ஆயிரம் ரூபாயும், வெண்கலப் பதக்கம் வெல்லும் நபர்களுக்கு 12 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும்.