செய்திகள்

வடகொரியா எல்லையில் உள்ள எதிர்பிரசார ஸ்பீக்கர்களை அகற்ற தென்கொரியா முடிவு

வளர்ந்துவரும் புதிய உறவுகளை மேலும் பலப்படுத்தும் வகையில் வடகொரியா நாட்டு எல்லையில் அமைத்துள்ள எதிர்பிரசார ஸ்பீக்கர்களை அகற்ற தென்கொரியா தீர்மானித்துள்ளது. #SouthKorea #propaganda #loudspeakers #NorthKoreanborder

மாலை மலர்

விரோதிகளாக இருந்துவந்த தென்கொரியா - வடகொரியா அதிபர்கள் பல ஆண்டுகளுக்கு பின்னர் நேருக்குநேர் சந்தித்துப் பேசும் உச்சி மாநாடு கடந்த 27-ம் தேதி நடைபெற்றது. இரு நாடுகளின் தலைவர்களின் இந்த திருப்புமுனை சந்திப்புக்கு உலக நாடுகள் வரவேற்பு தெரிவித்துள்ளன.

முன்னதாக, வடகொரியா-தென்கொரியா நாடுகளுக்கு இடையிலான எல்லைப்பகுதியில் தென்கொரியாமிகப்பெரிய ஒலிபெருக்கிகளை கட்டிவைத்து, வடகொரிய அதிபரின் அணுஆயுத மோகம் அந்நாட்டு மக்களை கடுமையான பொருளாதார சீர்குலைவில் நிறுத்திவிடும் என்று கடந்த சில ஆண்டுகளாக அந்த ஒலிபெருக்கிகளின் மூலம் பிரசாரம் செய்து வந்தது.