இந்நிலையில், கிம்பர்லியில் இன்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் ஜிம்பாப்வே அணியும், தென் ஆப்பிரிக்கா அணியும் மோதின.
டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி ஜிம்பாப்வே அணி முதலில் களமிறங்கியது.
ஆனால், தென் ஆப்பிரிக்காவின் துல்லிய பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் ஜிம்பாப்வே அணி சிக்கி திணறியது. இதனால் ஜிம்பாப்வே அணி 34.1 ஓவரில் 117 ரன்களுக்குள் ஆல் அவுட்டானது. அந்த அணியில் எல்டன் சிகும்பரா 27 ரன்களும், கேப்டன் மசகட்சா 25 ரன்களும் எடுத்தனர்.
தென் ஆப்பிரிக்கா அணி சார்பில் லுங்கி நிகிடி 3 விக்கெட்டும், ரபடா, இம்ரான் தாஹிர் மற்றும் அந்திலே பெலுகுவாயா ஆகியோர் தலா 2 விக்கெட் எடுத்தனர்.
இதையடுத்து, 118 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி களமிறங்கியது. தென் ஆப்பிரிக்காவின் முன்னணி வீரர்களை சதாரா வெளியேற்றி அதிர்ச்சி அளித்தார்.