அப்போது மைதானம் முழுவதும் ப்ளூ மற்றும் பச்சை கலராக காட்சியளிக்கும். ஆனால் நேற்றைய போட்டியின்போது மைதானத்தில் எங்கு பார்த்தாலும் ப்ளூ ஜெர்சியாகத்தான் தெரிந்தது. இந்தியா ரசிகர்கள்தான் அதிக அளவில் திரண்டிருந்தனர்.
போட்டியின்போது வர்ணனை செய்து கொண்டிருந்த ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் ‘‘மைதானம் முழுவதும் ப்ளூ ஜெர்சியாகவும், இந்திய தேசியக் கொடியாவும் காட்சியளிக்கிறது. பச்சை கலரை பெரிய அளவில் பார்க்க முடியவில்லை’’ என்றார்.
அவருடன் வர்ணனை செய்து கொண்டிருந்த இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி ‘‘ஆமாம், அதிகப்படியான டிக்கெட் விலை காரணமாக இருக்கலாம்’’ என்று கூலாக பதில் அளித்தார்.
பாகிஸ்தான் தற்போது பொருளாதார சிக்கலில் தவித்து வருகிறது. பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், தற்போதைய பிரதமருமான இம்ரான் கான் வெளிநாடுகளுக்கு சென்று பொருளாதார உதவி கோரி வருகிறார்.