இந்த விவகாரத்தில் அப்போது கேப்டனாக செயல்பட்ட ஸ்மித், துணைக் கேப்டனாக திகழ்ந்த வார்னர் ஆகியோருக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் சர்வதேச போட்டியில் விளையாட ஒரு வருடம் தடைவிதித்தது. இந்த தடைக்காலம் வருகிற 28-ந்தேதியுடன் முடிவடைகிறது.
இதற்கிடையே பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடக்க இருக்கிறது. முதல் போட்டி வருகிற 22-ந்தேதி தொடங்குகிறது. 2-வது போட்டி 24-ந்தேதியும், 3-வது போட்டி 27-ந்தேதியும், 4-வது போட்டி 29-ந்தேதியும், ஐந்தாவது போட்டி மார்ச் 31-ந்தேதியும் நடக்கிறது.
ஸ்மித், வார்னர் 4-வது போட்டியில் இருந்து பங்கேற்கலாம். முழங்கை காயத்திற்கு அறுவை சிகிச்சை மேற்கொண்ட இருவரும் கடந்த சில வாரங்களாக ஓய்வில் இருந்தனர். தற்போது காயத்தில் இருந்து மீண்டும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி இரண்டு போட்டிகளிலும் இருவரும் இடம்பிடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் பாகிஸ்தான் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி இன்று அறிவிக்கப்பட்டது.