சிவகங்கை மாவட்டம் 
செய்திகள்

கொரோனா இல்லாத மாவட்டமானது சிவகங்கை

கொரோனாவால் பாதிக்கப்பட்ட அனைவரும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதால் தொற்று இல்லாத மாவட்டமாக சிவகங்கை உள்ளது.

மாலை மலர்

சிவகங்கை:

சிவகங்கை  மாவட்டத்தில் 12 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். ஆனால் அதற்கு மேல் அந்த எண்ணிக்கை அதிகரிக்காமல் நின்று விட்டது. இதில் சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று 11 பேர் குணம் அடைந்து வீடு திரும்பிவிட்டனர்.

சிகிச்சையில் இருந்த கடைசி நபரும் குணமடைந்ததால் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அவருக்கு சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் சால்வை அணிவித்து வழியனுப்பி வைத்தார்.

சிகிச்சையில் இருந்த கடைசி நபரும் டிஸ்சார்ஜ் ஆனதால் கொரோனா இல்லாத மாவட்டமாக சிவகங்கை உள்ளது.