கர்நாடக முதல்-அமைச்சர் சித்தராமையா இன்று பெங்களூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
காவிரி நதிநீரை பகிர்ந்து கொள்வதற்கு மேலாண்மை வாரியத்தை அமைக்க கூடாது. காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தால் அது மாநில அரசின் உரிமையை பறிப்பது போன்று ஆகிவிடும்.
அத்தகைய நிலை ஏற்பட்டால் அதற்கான முழு பொறுப்பையும் மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசுதான் ஏற்க வேண்டும். எனவே காவிரி மேலாண்மை வாரியத்திற்கு பதில் கண்காணிப்பு குழு ஒன்றை மத்திய அரசு அமைக்கலாம்.