‘தமிழர் தந்தை’ சி.பா.ஆதித்தனாரின் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் மறைந்த முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். 1987-ம் ஆண்டு எழும்பூரில் 5 சாலைகள் சந்திப்பில், சி.பா.ஆதித்தனாரின் சிலையை திறந்து வைத்தார். அந்த சாலைக்கு ‘சி.பா.ஆதித்தனார் சாலை’ என்றும் எம்.ஜி.ஆர். பெயரிட்டார்.
இதற்கிடையே, சி.பா.ஆதித்தனார் பிறந்தநாள் இந்த ஆண்டு முதல் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று கடந்த பிப்ரவரி மாதம் 14-ந்தேதி சட்டசபையில் விதி எண் 110-ன் கீழ் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பை வெளியிட்டார்.