செய்திகள்

தமிழ் அறிஞர்களுக்கு செம்மொழி விருதுகள்: குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி வழங்கினார்

செம்மொழி தமிழ் மற்றும் இலக்கியத்திற்கு சிறந்த பங்களிப்பை வழங்கிய அறிஞர்களுக்கு, செம்மொழி விருதுகளை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வழங்கினார்.

மாலை மலர்

செம்மொழி தமிழாய்வில் சிறப்பான பங்களிப்பை வழங்கும் அறிஞர்களுக்கு, செம்மொழி தமிழுக்கான குடியரசுத் தலைவர் விருதுகள் வழங்கப்படுகின்றன. அவ்வகையில், டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று நடைபெற்ற விழாவில் தமிழ் அறிஞர்களுக்கு செம்மொழி விருதுகளை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வழங்கினார். 2013-14, 2014-15 மற்றும் 2015-16ம் ஆண்டுக்கான விருதுகள் இன்று வழங்கப்பட்டன.