செய்திகள்

போதுமான ஆதரவு இல்லை என்பதால் வாபஸ் பெற வேண்டுமா? மீரா குமார் ஆதங்கம்

ஜனாதிபதி தேர்தலில் வெற்றிக்கு தேவையான உறுப்பினர்களின் ஆதரவு இல்லை என்பதால் வாபஸ் பெறவேண்டுமா என்ன? என எதிர்க்கட்சி வேட்பாளர் மீரா குமார் பத்திரிகையாளர் சந்திப்பின்போது கேள்வி எழுப்பினார்.

மாலை மலர்

ஜனாதிபதி தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் ராம் நாத் கோவிந்த், எதிர்க்கட்சிகள் சார்பில் போட்டியிடும் முன்னாள் சபாநாயகர் மீரா குமார் ஆகியோர் அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர்.

அவ்வகையில், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவர் தேவகவுடா ஆகியோரை சந்தித்து ஆதரவு கேட்பதற்காக மீரா குமார் இன்று பெங்களூர் வந்தார். பின்னர் கட்சி அலுவலகத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, ஆதரவு கட்சிகளின் வாக்கு விவரங்களை கணிக்கும்போது, பா.ஜ.க. ஆதரவு வேட்பாளர் ராம் நாத் கோவிந்துக்கு அதிக வாய்ப்பு இருப்பதால் நீங்கள் ஏன் போட்டியிடுகிறீர்கள்? என நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.