செய்திகள்

ரஷியாவுடன் சமாதான உடன்படிக்கைக்கு தயாராகும் ஜப்பான்

இரண்டாம் உலகப்போரின் போது பசிபிக் பெருங்கடல் பகுதியில் ரஷியா கைப்பற்றிய தீவுகள் விவகாரத்தில் அந்நாட்டுடன் சமாதான உடன்படிக்கை செய்துகொள்ள ஜப்பான் முன்வந்துள்ளது. #ShinzoAbe #JapanRussiapeace

மாலை மலர்

இரண்டாம் உலகப்போரின் போது பசிபிக் பெருங்கடல் பகுதியில் உள்ள சில தீவு கூட்டங்களை ரஷியா கைப்பற்றி தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.

குரிலே தீவுகள் என்றழைக்கப்படும் இந்த தீவு கூட்டத்தை தங்கள் நாட்டு வடக்கு எல்லை என்று ஜப்பான் சொந்தம் கொண்டாடி வருகிறது. இதனால், பல ஆண்டுகளாக ரஷியா - ஜப்பான் இடையே சுமூக உறவுகள் பாதிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், சமீபத்தில் ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே ரஷியா சென்றிருந்தார். அங்குள்ள விளாடிவோஸ்ட்டோக் நகரில் ஜப்பான் பிரதமருடன் செய்தியாளர்களை சந்தித்த ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், சர்ச்சைக்குரிய தீவுகள் பிரச்சனையில் எவ்வித முன்நிபந்தனைகளுமின்றி சமாதான உடன்படிக்கை ஏற்படுத்திகொள்ள இருநாடுகளும் முன்வர வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

இந்த கருத்துக்கு அப்போது பதில் தெரிவிக்காத ஷின்ஸோ அபே,  தாய்நாடு திரும்பியதும் இதுதொடர்பாக  இன்று கருத்து தெரிவித்துள்ளார்.