டெல்லி முன்னாள் முதல் மந்திரி மறைந்த ஷீலா தீட்சித்துக்கு நினைவாஞ்சலி செலுத்தும் பிரார்த்தனை கூட்டம் டெல்லி மார்டர்ன் பள்ளி வளாகத்தில் உள்ள அரங்கத்தில் இன்றிரவு நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் துணை ஜனாதிபதி ஹமித் அன்சாரி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி, நடிகை ஷர்மிளா டாகூர் உள்ளிட்ட பல்துறை பிரபலங்கள் பங்கேற்று மறைந்த ஷீலா தீட்சித்துடன் தங்களுக்கு இருந்த நல்லுறவுகளை நினைவுகூர்ந்தனர்.