டாக்கா:
வங்காளதேசம் நாட்டின் பிரதமர் ஷேக் ஹசினா, ஆளும் அவாமி லீக் கட்சியின் தலைவராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஷேக் ஹசினாவை ஒரு மனதாக கட்சி தேசிய கவுன்சில் உறுப்பினர்கள் தேர்வு செய்தனர்.
தேர்வுக்கு பின்னர் தேசிய கவுன்சில் கூட்டத்தில் பேசிய ஹசினா, என்னை தேர்வு செய்ததற்கு நன்றி, கடந்த 38 ஆண்டு காலமாக நான் கட்சியை வழிநடத்தி வருகிறேன். இதனால் நீங்கள் எனது வயதை கருத்தில் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.