செய்திகள்

7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு - வாலிபர் கைது

7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபரை பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் கைது செய்தனர். #ChildMolested

காரைக்குடி:

காரைக்குடி பகுதியை சேர்ந்த 17 வயது வாலிபர், 7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இந்தநிலையில் சம்பவத்தன்று பள்ளிக்கு சென்றிருந்த அந்த சிறுமியை அழைப்பதற்காக அவரது தாய் சென்றுள்ளார். அழைத்து வரும்போது, எதிரே அந்த வாலிபரை கண்டதும் சிறுமி தனது தாயின் பின்னால் ஒளிந்தாள்.

இதுகுறித்து கேட்டபோது, வாலிபர் பாலியல் தொல்லை கொடுத்தது குறித்து தனது தாயிடம் தெரிவித்தார். இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் சாக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலிபரை கைதுசெய்தனர். 

SCROLL FOR NEXT