குஜராத் மாநிலம் உன்ஜா மாவட்டத்தில் உள்ள மெஹ்சானா - உன்ஜா நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை பயங்கரமான விபத்து ஏற்பட்டது. ராஜஸ்தான் நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்து கார் மீது மோதிய விபத்தில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
விபத்தில் உயிரிழந்தவர்கள் காரில் பயணம் செய்த 7 வாலிபர்கள் எனக்கூறப்படுகிறது. இவர்கள் அகமதாபத்திலிருந்து வந்து கொண்டிருந்தனர். வேகமாக சென்றதே விபத்துக்கு காரணம் என போலீசார் கருதுகின்றனர்.
சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடலை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.