தீவிரவாத தாக்குதல்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் தேசிய புலனாய்வு (என்.ஐ.ஏ.) முகமையின் டைரக்டர் ஜெனரல் ஆக மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி ஒய்.சி. மோடி நியமிக்கப்பட்டுள்ளார்.
தீவிரவாத சதி திட்டம், இந்தியாவுக்குள் தீவிரவாதிகளின் நடமாட்டம் போன்றவற்றை உளவறிந்து கண்காணிப்பதுடன் உள்நாட்டின் பல மாநிலங்களில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதல்கள் தொடர்பான வழக்குகளை தேசிய புலனாய்வு (என்.ஐ.ஏ.) முகமை விசாரித்து வருகிறது.