நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் திருச்சியில் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நீட் தேர்வு தொடர்பாக பொதுக்கூட்டம் நடத்த அனுமதி அளிப்பது குறித்து நீதிமன்றம் சில விதிகளை விதித்துள்ளது. அதே நேரத்தில் காவிரி பிரச்சனை தொடர்பாக பெங்களூரில் நடைபெற்ற பிரச்சனைகளின் போதும், முல்லை பெரியாறு பிரச்சனைகளின் போதும் உச்சநீதிமன்றம் உத்தரவை கடைபிடிக்காதது ஏன்?