ஆஸ்திரேலியாவில் சமீபகாலமாக அரசியல் ஸ்திரமற்ற தன்மை இருந்து வருகிறது. ஆளும் லிபரல் கட்சியில் தொடர்ந்து உட்கட்சி பூசல் ஏற்பட்டு அடிக்கடி புதிய பிரதமர்கள் பதவி ஏற்று வருகின்றனர். தற்போது மால்கம் டர்ன்புல் பிரதமராக பதவி வகித்து வருகிறார். லிபரல் கட்சியை சேர்ந்த முன்னாள் வங்கி அதிகாரியான இவர் கடந்த 3 ஆண்டுகளாக பிரதமர் பதவி வகித்து வருகிறார்.
தற்போது இவருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. எனவே கட்சி தலைவர் பதவிக்கு தேர்தல் நடந்தது. அதில் அவர் வெற்றி பெற்று தனது பதவியை தக்க வைத்துக்கொண்டார்.
அதில் தான் மீண்டும் போட்டியிடபோவதில்லை என மால்கம் டர்ன்புல் அறிவித்தார். அதன்படி அவர் போட்டியிடவில்லை. வெளியுறவு மந்திரி ஜுலி பிஷ்ப், பொருளாளர் ஸ்காட் மாரிசன் ஆகியோர் பிரதமர் பதவிக்கு போட்டியிட்டனர்.