பிளஸ்-2 வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த 2-ந்தேதி தொடங்கியது. இந்த தேர்வு வருகிற 24-ந்தேதியுடன் நிறைவு பெற உள்ளது. பிளஸ்-1 வகுப்பு மாணவர்களுக்கு கடந்த 4-ந்தேதி தேர்வு தொடங்கிவிட்டது. அவர்களுக்கு 26-ந்தேதியுடன் தேர்வு முடிவடைகிறது. அதேபோல், எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கு பொதுத்தேர்வு வருகிற 27-ந்தேதி தொடங்க உள்ளது.
அதன் தொடர்ச்சியாக 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வு மற்றும் மூன்றாம் பருவத் தேர்வு நடைபெற உள்ளது. இதில் 6, 7, 8 மற்றும் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு வருகிற 30-ந்தேதி முதல் தேர்வு தொடங்குகிறது.
இதேபோல், 1, 2, 3, 4 மற்றும் 5-ம் வகுப்புகளுக்கான தேர்வு அடுத்த மாதம் (ஏப்ரல்) 1-ந் தேதி தொடங்க உள்ளது. இவர்களுக்கான தேர்வு அடுத்த மாதம் 20-ந்தேதிக்குள் முடிந்துவிடும்.
இறுதித் தேர்வு முடிந்த மறுநாளில் இருந்து, அதாவது அடுத்த மாதம் 21-ந்தேதி முதல் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படும் என்று கல்வித்துறை தெரிவித்து இருக்கிறது.