சிவகங்கை:
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இம்மானுவேல் சேகரன் நினைவு நாளையொட்டி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானமதுரை, சிவகங்கை, திருப்புவனம், இளையான்குடி, காளையார் கோவில் ஆகிய 5 தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
மேற்கண்ட தாலுகாக்களில் உள்ள பள்ளிகளில் நடக்க இருந்த காலாண்டு தேர்வுகள் வரும் 15-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் ஆட்சியர் அறிவித்துள்ளார்.