பள்ளி மாணவன் ஆகாஷ் ஆனந்தன் 
செய்திகள்

நாடு முழுவதும் மதுவிலக்கு - பிரதமருக்கு பள்ளி மாணவன் கடிதம்

நாடு முழுவதும் மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு பள்ளி மாணவன் ஆகாஷ் ஆனந்தன் கடிதம் எழுதி இருக்கிறார்.

மாலை மலர்

மதுவிலக்கு குறித்து போராடி வரும் பள்ளி மாணவன் ஆகாஷ் ஆனந்தன் (வயது 10), சென்னையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கடந்த 3 ஆண்டு காலமாக மதுவுக்கு எதிரான பிரசாரம் மேற்கொண்டு வருகிறேன். இந்த 3 ஆண்டு கால பிரசாரத்தில் அனைத்து மாநிலங்களிலும் மதுவிலக்கு கொண்டுவரப்பட்டு தேசிய அளவில் அமல்படுத்தப்பட்டால் மட்டுமே, முழுமையான மது இல்லாத நாடு சாத்தியம் என்பதை உணர்ந்தேன். எனவே நாடு முழுவதும் மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி இருக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.