ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் கடந்த ஆகஸ்ட் மாதம் 21-ம் தேதி கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் நீதிமன்ற காவலில் அடைத்து வைக்கப்பட்டுள்ள மத்திய முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் கைதாகி 100 நாட்களுக்கு மேல் ஆகிறது.
அவரது வழக்கறிஞர்கள் சி.பி.ஐ. நீதிமன்றத்திலும், டெல்லி ஐகோர்ட்டிலும் தாக்கல் செய்த ஜாமீன் மனுக்கள் அடுத்தடுத்து தள்ளுபடி செய்யப்பட்டன.