செய்திகள்

இந்த வார்த்தையை சொன்னால் சிக்கன் லெக் பீசில் 10 ரூபாய் தள்ளுபடி

சத்தீஸ்கரைச் சேர்ந்த சாலையோர உணவக உரிமையாளர், பாகிஸ்தான் எதிர்ப்பை மக்களிடம் வித்தியாசமான முறையில் பதிய வைக்கும் முயற்சியில் இறங்கி உள்ளார். #PulwamaAttack #PakistanMurdabad

மாலை மலர்

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-ம் தேதி பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு நடத்திய தற்கொலைத் தாக்குதலில், துணை ராணுவப் படையைச் சேர்ந்த 40 வீரர்கள் உயிரிழந்தனர்.

இந்த தாக்குதலுக்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். பயங்கரவாதத்தை ஆதரிக்கும் பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்று தொடர்ந்து கூறி வருகின்றனர். போராட்டம், கடையடைப்பு என தொடர்ந்து எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.