விக்கெட் கீப்பர் டி காக் அதிகபட்சமாக 80 ரன்கள் சேர்த்தார். பவுமா 47 ரன்னும், டு பிளிசிஸ் 35 ரன்களும், மகாராஜ் 29 ரன்களும் சேர்த்தனர். இலங்கை அணி தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் விஷ்வா பெர்னாண்டோ 4 விக்கெட்டும், ரஜிதா 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
பின்னர் இலங்கை அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் இலங்கை அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 49 ரன்கள் எடுத்திருந்தது, கருணாரத்னே 28 ரன்களுடனும், பெர்னாண்டோ 17 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. கருணாரத்னே மேலும் இரண்டு ரன்கள் அடித்து 30 ரன்னில் ஆட்டமிழந்தார். அதேபோல் பெர்னாண்டோவும் மேலும் 2 ரன்கள் எடுத்து 19 ரன்னில் ஆட்டமிழந்தார்.
அதன்பின் இலங்கையின் விக்கெட்டுக்கள் சீரான இடைவெளியில் சரிய ஆரம்பித்தது. குசால் பேரேரா (51) மட்டும் தாக்குப்பிடித்து அரைசதம் அடித்தார். டி சில்வா 23 ரன்களும், அறிமுக வீரர் அம்பல்டெனியா 24 ரன்களும் அடிக்க இலங்கை 191 ரன்னில் ஆல்அவுட் ஆனது. ஸ்டெயின் சிறப்பாக பந்து வீசி நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.