எழும்பூர் நீதிமன்றத்தில் ஆம்புலன்சில் சரணடைய வந்த ராஜகோபால் 
செய்திகள்

சரவணபவன் ராஜகோபால் சென்னை குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்தார்

ஜீவஜோதி கணவர் சாந்தகுமார் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட சரவணபவன் ஓட்டல் உரிமையாளர் ராஜகோபால் சென்னை குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று சரணடைந்தார்.

மாலை மலர்

சென்னை:

ஜீவஜோதி கணவர்  சாந்தகுமார் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை உறுதி செய்யப்பட்ட ராஜகோபால், தனது உடல்நிலையை காரணம் காட்டி சரண் அடைவதற்கு அவகாசம் கேட்டிருந்தார். ஆனால், அவருக்கு அவகாசம் வழங்க மறுத்துவிட்ட உச்ச நீதிமன்றம், உடனடியாக சரண் அடையும்படி இன்று உத்தரவிட்டது.

இதைதொடர்ந்து, சென்னை எழும்பூரில் உள்ள குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று மாலை ராஜகோபால் சரணடைந்தார்.