சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் இன்று கோவை வந்தார். அவருக்கு கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர் அவரிடம் தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் வருமான வரி சோதனை குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்து சரத்குமார் கூறியதாவது:-
வருமானவரித்துறை சோதனை என்பது சகஜமான ஒன்று. அவர்கள், அவர்களது வேலையை பார்க்கின்றனர்.
போயஸ் இல்லம் என்பது முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா வசித்த வீடு. இந்த சோதனை அவர் மீது பாசம் கொண்ட தொண்டர்களுக்கு அதிர்ச்சியையும், மன வேதனையை ஏற்படுத்தும்.
இவ்வாறு அவர் கூறினார்.