செய்திகள்

மணற்சிற்பம் உருவாக்கி வாஜ்பாய்க்கு அஞ்சலி செலுத்திய சுதர்சன் பட்நாயக்

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவைத் தொடர்ந்து மணற்சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் மணற்சிற்பம் உருவாக்கி அஞ்சலி செலுத்தியுள்ளார். #AtalBihariVajpayee #RIPVajpayee #SudarsanPattnaik

மாலை மலர்

இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவரும், முன்னாள் பிரதமருமான அடல் பிகாரி வாஜ்பாய் (வயது 93) நேற்று டெல்லியில் காலமானார். அவரது உடல் டெல்லி கிருஷ்ணாமேனன் பார்க்கில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனம் மூலம் டெல்லி தீன்தயாள் உபாத்யாய் மார்க் பகுதியில் உள்ள பா.ஜனதா தலைமை அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டு அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ளது.