ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சுதர்சன் பட்நாயக் உள்நாட்டில் நடக்கும் மகிழ்ச்சியான சம்பவங்கள் மற்றும் துக்க நிகழ்வுகளை பூரி கடற்கரையில் மணல் சிற்பங்களை செதுக்கி மக்களின் மனங்களிலும் அந்த பாதிப்பை உண்டாக்கி வருகிறார்.
இதுதவிர பல நாடுகளில் நடைபெற்ற சர்வதேச மணற்சிற்ப போட்டியில் இந்தியாவின் சார்பில் பங்கேற்று தனது திறமையை வெளிப்படுத்தி வரும் மணற்சிற்ப கலைஞரான சுதர்சன் பட்நாயக் முதல் பரிசாக தங்கப் பதக்கம் மற்றும் பல்வேறு விருதுகளை வென்று தாய்நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார்.