இந்துக்கள் அல்லாதோருக்கு அனுமதியில்லாத சோம்நாத் கோயிலுக்கு கடந்த ஆண்டு ராகுல் காந்தி சென்றபோது, அவர் பூணூல் அணிந்த சிவபக்தர் என விளக்கமளிக்கப்பட்டிருந்தது.
தற்போது மத்தியப் பிரதேச சட்டமன்ற தேர்தலுக்காக அம்மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்த ராகுல் காந்தி உஜ்ஜயினியில் உள்ள மகாகாளேஸ்வரர் கோயிலுக்கு சென்றார். இதை இந்தூரில் நடைபெற்ற பாஜக நிகழ்ச்சியின்போது பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பிட் பத்ரா சுட்டிக்காட்டினார்.