கடந்த 1984-ம் ஆண்டு பிரதமராக இருந்த இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டபோது டெல்லியில் சீக்கியர்களுக்கு எதிராக பயங்கர கலவரம் ஏற்பட்டு நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக அப்போது டெல்லி எம்.பி.யாக இருந்த சஜ்ஜன்குமார் உள்பட 6 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. இதில் சஜ்ஜன்குமார் விடுதலை செய்யப்பட்டார்.
இதை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் சி.பி.ஐ. மேல்முறையீடு செய்தது. நேற்று இந்த வழக்கில் சஜ்ஜன்குமார் விடுதலையை ரத்து செய்த ஐகோர்ட்டு நீதிபதிகள் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தனர். 31-ந் தேதிக்குள் அவர் சரண் அடைய வேண்டும். டெல்லியை விட்டு வெளியேறக் கூடாது என்றும் உத்தரவிட்டனர்.