சாய் பிரனீத் 
செய்திகள்

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்ஸ்- இந்திய வீரர் சாய் பிரனீத் வெண்கலம் வென்றார்

உலக சாம்பியன்ஷிப்ஸ் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர் சாய் பிரனீத் வெண்கலம் வென்றார்.

மாலை மலர்

25-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்ஸ் போட்டி சுவிட்சர்லாந்தின் பாசெல் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரை இறுதி போட்டியில் இந்திய வீரர் சாய் பிரனீத், ஜப்பான் வீரர் கெண்டோவை எதிர்கொண்டார்.

இந்த போட்டியில் சாய் பிரனீத் 21-13, 21-8 என்ற செட் கணக்கில் தோல்வியுற்றார். இதையடுத்து உலக சாம்பியன்ஷிப்ஸ் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர் சாய் பிரனீத் வெண்கலம் வென்றுள்ளார்.

உலக பேட்மிண்டனில் ஆண்கள் பிரிவில் இந்தியர் ஒருவர் பதக்கம் வெல்வது 36 ஆண்டுகளுக்கு பிறகு இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.