மூடப்போவதாக வெளியான தகவல் வதந்தியே - ‘ஏர் இந்தியா நிறுவனம் தொடர்ந்து இயங்கும்’
ஏர் இந்தியா நிறுவனம் மூடப்படுகிறது அல்லது இயக்கம் நிறுத்தப்படுகிறது என வெளியான தகவல்கள் அனைத்தும் வதந்தியே என அஸ்வனி லோகானி தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் விமான போக்குவரத்து நிறுவனமான ஏர் இந்தியா, மிகப்பெரும் நிதி நெருக்கடியில் தத்தளித்து வருகிறது. இது தொடர்பாக ஏர் இந்தியா தலைவர் அஸ்வனி லோகானி சமீபத்தில் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார்.