விஜயதசமி விழாவையொட்டி இன்று பேசிய ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பகவத், அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கென தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்து இருந்தார்.
இதுகுறித்து பேசிய பிரவீன் தொகாடியா, அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான சட்டம் குறித்து பேச ஏன் நான்கரை வருடங்கள் காத்திருக்க வேண்டும்? என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், கடந்த 2017-ம் ஆண்டிலேயே ராமர் கோவில் கட்டுவதற்கு தனிச்சட்டம் இயற்ற தாம் கோரிக்கை விடுத்ததாகவும், அதற்காக தன்னையும், தனது ஆதரவாளர்களையும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தண்டித்ததாகவும் கூறியுள்ளார்.