பாராளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடரை எப்போது நடத்துவது? எப்படி நடத்துவது? என்று துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, சபாநாயகர் ஓம் பிர்லா இருவரும் ஆலோசனை நடத்தினார்கள். வழக்கமான நடைமுறையில் கூட்டத்தொடரை நடத்த முடியாது என்பதால் பாராளுமன்றத்தின் மைய மண்டபத்தில் மக்களவை கூட்டத்தை நடத்த ஆலோசித்தனர்.