செய்திகள்

அதிமுக எம்பிக்கள் அமளி- மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

மாநிலங்களவையில் இன்று மேகதாது விவகாரத்தை எழுப்பி அதிமுக எம்பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டதால் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. #WinterSession #RSAdjourned

மாலை மலர்

பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. எம்பிக்கள் மற்றும் முன்னாள் எம்பிக்கள் மறைவுக்கு முதல் நாளில் இரங்கல் தெரிவிக்கப்பட்டு அவை ஒத்திவைக்கப்பட்டது. இரண்டாம் நாளான நேற்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பல்வேறு விவகாரங்களை முன்வைத்து அமளியில் ஈடுபட்டதால் பாராளுமன்ற இரு அவைகளும் முடங்கின.