செய்திகள்

வங்கி கணக்கில் இருந்து ரூ.12 ஆயிரம் அபேஸ் - முன்னாள் ராணுவவீரர் மனைவி புகார்

வேலூர் அருகே முன்னாள் ராணுவ வீரர் மனைவி வங்கி கணக்கில் இருந்து ரூ.12 ஆயிரத்தை நூதன முறையில் அபேஸ் செய்த மர்மநபர்கள் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மாலை மலர்

வேலூர்:

வேலூரை அடுத்த காட்டுபுதூர் ஆவாரம்பாளையம் மாரியம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன், முன்னாள் ராணுவ வீரர். இவருடைய மனைவி சாரதா (வயது 64). இவர் நேற்று போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.

அதில், ‘‘எனது வங்கிக்கணக்கில் இருந்து ரூ.12 ஆயிரம் எடுக்கப்பட்டதாக எனது செல்போனுக்கு கடந்த 6-ந் தேதி குறுந்தகவல் வந்தது. இது குறித்து சம்பந்தப்பட்ட வங்கிக்கு நேரில் சென்று அதிகாரிகளிடம் கேட்டதற்கு, ஆன்-லைன் மூலம் ரூ.12 ஆயிரம் எடுக்கப்பட்டுள்ளதாகவும், பணத்தை எடுத்தவர்கள் குறித்த விபரம் தெரியவில்லை என்றும் கூறினார்கள்.

எனவே எனது வங்கி கணக்கில் இருந்து ரூ.12 ஆயிரத்தை நூதன முறையில் அபேஸ் செய்த மர்மநபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பணத்தை பெற்றுத்தர வேண்டும்’’ என்று கூறியிருந்தார். மனுவை பெற்றுக்கொண்ட போலீசார் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர். #tamilnews