சீர்காழி:
நாகை மாவட்டம் சீர்காழி ரயில்வே ரோடு பகுதியில் கருணாகரன்(வயது 40). இவர் அசைவ ஓட்டல் வைத்து நடத்தி வருகிறார். இந்த ஓட்டலுக்கு சென்ற விளந்திட சமுத்திரம் பகுதியை சேர்ந்த மனோகரன் மகன் கட்ட ராஜா என்கிற பூரணச்சந்திரன் (25) ஓசியில் சிக்கன் பிரியாணி கேட்டாராம்.
அதற்கு கருணாகரன் மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கட்ட ராஜா, கருணாகரனை டியூப் லைட்டால் தாக்கி, கடையில் இருந்த பொருட்களை உடைத்து சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இச்சம்பவம் வணிகர்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து கருணாகரன் அளித்த புகாரின்பேரில் சீர்காழி போலீசார் வழக்கு பதிவு செய்து கட்டை ராஜாவை கைது விசாரணை மேற்கொண்டுள்ளனர்.