செய்திகள்

உ.பி.யில் அபாய அளவை தாண்டி ஓடும் சரயு நதி - வெள்ள அபாய எச்சரிக்கை

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் குறிப்பிட்ட அளவை தாண்டி சரயு நதி பெருக்கெடுத்து ஓடுவதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. #Sarayu #Flood

லக்னோ:

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் சரயு நதி ஓடுகிறது. சமீபத்தில் பெய்த கனமழையால் அயோத்யாவில் சரயு ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

ஆற்றில் தண்ணீர்ின் அளவு குறிப்பிட்ட அளவைத் தாண்டிசென்று கொண்டிருக்கிறது. சரயு ஆற்றில் சேமிக்கப்பட்டு வரும் நீரின் அளவும் 93 அடியை தொட்டுள்ளது. மேலும் நீரின் வேகமும் அதிகரிதத்துள்ளது.

இதனால் சரயு ஆற்றங்கரையோரம் உள்ள பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மாவட்ட நிர்வாகத்தினர் அறிவுறுத்தி உள்ளனர். #Sarayu #Flood