ஐகோர்ட் மதுரை கிளை 
செய்திகள்

ராஜீவ் கொலை வழக்கில் கைதான ரவிச்சந்திரனுக்கு 15 நாள் பரோல்

ராஜீவ் கொலை வழக்கில் கைதான ரவிச்சந்திரனுக்கு 15 நாள் பரோல் வழங்கி ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மாலை மலர்

மதுரை:

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த ரவிச்சந்திரன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இவருக்கு பரோல் கேட்டு அவரது தாயார் ராஜேஸ்வரி மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த ஐகோர்ட்டு, ரவிச்சந்திரனுக்கு 15 நாள் பரோல் வழங்கி உத்தரவிட்டது.