ராஜபாளையம்:
ராஜபாளையத்தில் சட்ட விரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தன.
இதையடுத்து டி.எஸ்.பி. ரவிச்சந்திரன் உத்தரவின் பேரில் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பவுல் ஏசு தாஸ், சப்-இன்ஸ்பெக்டர் மாரியப்பன் மற்றும் போலீசார் கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர்.
அம்பலப்புளி பஜார் குருசாமி கோவில் அருகே திருப்பதி (வயது 58) என்பவரின் கடையில் போலீசார் சோதனை செய்தனர். அப்போது அங்கு விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 4 ஆயிரத்து 184 புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து ராஜபாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து கடை உரிமையாளர் திருப்பதியை கைது செய்தனர்.