செய்திகள்

ராஜராஜ சோழன் சிலை விவகாரம் - சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு பதிலளிக்க மேலும் 6 வாரம் அவகாசம்

ராஜராஜ சோழன் சிலைக்கு சொந்தம் கொண்டாடும் கிரா சாராபாய் மனுவிற்கு பதிலளிக்க சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவுக்கு ஐகோர்ட் மேலும் 6 வார அவகாசம் அளித்துள்ளது. #IdolTheftCase #RajaRajaCholanIdol

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து ராஜ ராஜசோழன் மற்றும் லோகமாதேவி சிலைகள் மீட்கப்பட்டன. இதனை தொடர்ந்து சிலைகளை சட்டவிரோதமாக வைத்திருந்ததாக சாராபாய் அறக்கட்டளை நிர்வாகி கிரா சாராபாய் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி கிரா சாராபாய் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

SCROLL FOR NEXT