தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தில் சார் பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
இந்த அலுவலகத்தில் சார்பதிவாளராக (பொறுப்பு) தருமபுரியில் உள்ள பிடமனேரியை சேர்ந்த அருட்பெருஞ்ஜோதி (வயது 45) என்பவர் இருந்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பத்திரம் பதிவு செய்ய லஞ்சம் பெறப்படுவதாக தர்மபுரி லஞ்ச ஒழிப்புத்துறைக்கு பல்வேறு புகார்கள் சென்றன.
இதைத்தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு சுப்பிரமணியன், இன்ஸ்பெக்டர் மஞ்சுளா ஆகியோர் அடங்கிய குழுவினர் நேற்று மாலை காரிமங்கலம் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு சென்று திடீரென்று சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில், சார் பதிவாளர் அருட்பெருஞ்ஜோதியிடம் கணக்கில் வராத ரூ.33 ஆயிரத்து 266 மற்றும் அவருக்கு இடைத்தரகர்களாக செயல்பட்ட பிரகாஷ் என்பவரிடம் ரூ.5 ஆயிரத்து 600 மற்றும் சேகர் என்பவரிடம் ரூ.8 ஆயிரத்து 920-ம் கணக்கில் வராமல் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து சார்பதிவாளர் உள்ளிட்ட 3 பேரிடமும் இருந்து கணக்கில் வராத ரூ.47 ஆயிரத்து 786 பறிமுதல் செய்யப்பட்டது.
சார்பதிவாளர் அருட்பெருஞ்ஜோதி