ராஜஸ்தான் மாநிலத்தில், 'எம்.எல்.ஏ-க்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்களுக்கு எதிரான தனிநபர்களின் ஊழல் புகார்களை, அரசின் ஒப்புதல் பெறாமல் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளக்கூடாது என்று நீதிமன்றங்களுக்கு மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
அரசு ஊழியர்கள்மீது தனிநபர்கள் தெரிவிக்கும் குற்றச்சாட்டுகளை ஊடகங்கள் வெளியிட்டால், அது குற்றமாகக் கருதப்படும்' என்று வசுந்தரா ராஜே தலைமையிலான ராஜஸ்தான் மாநில அரசு புதிய அவசர சட்டத்தை கொண்டு வந்துள்ளது.
இந்நிலையில், ராஜஸ்தான் அரசின் இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி இன்று கண்டனம் தெரிவித்துள்ளார்.