செய்திகள்

பொதுமக்கள் மத்தியில் பிரதமர் மோடி வெறுப்பு, பயம், கோபத்தை விதைக்கிறார்- ராகுல் குற்றச்சாட்டு

பிரதமர் மோடி தனது பேச்சு மூலம் பொதுமக்கள் மனதில் வெறுப்பு, பயம், கோபத்தை விதைப்பதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். #Congress #RahulGandhi #Modi

பாராளுமன்றத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று ஆவேசமாக பேசினார். பிரதமர் மோடி மீது ஊழல் குற்றச்சாட்டை சுமத்தினார். தன்னை நேருக்கு நேர் அவரால் பார்க்க முடியவில்லை என்றார்.

இதற்கு மோடி பதிலடி கொடுத்தார். பிரதமர் இருக்கையை கைப்பற்ற ராகுல் காந்தி அவசரப்படுவதாக கூறினார்.

இந்த நிலையில் பிரதமர் நரேந்திரமோடியின் பாராளுமன்ற பேச்சு தொடர்பாக ராகுல் காந்தி இன்று டுவிட்டரில் தெரிவித்த கருத்து வருமாறு:-

தேசத்தை கட்டமைப்பதற்கான ஒரே வழி அன்பும், இரக்கமும்தான். நம் அனைவரின் மனதிலும் அன்பும், இரக்கமும் உள்ளது என்பதை நிரூபிப்போம்.

SCROLL FOR NEXT