பிரதமர் நரேந்திர மோடி மான் கி பாத் (மனதின் குரல்) என்ற உரையை ஒவ்வொரு மாதமும் நிகழ்த்தி வருகிறார். இது வானொலியில் ஒலிபரப்பு செய்யப்படுகிறது. இந்த உரைக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது.
இதேபோன்ற ஒரு நிகழ்ச்சியை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியும் வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்.
டுவிட்டர் தளத்தில் சமீபத்தில் வெளிமாநில தொழிலாளர்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்து அவர் பல்வேறு கருத்துக்களையும், வீடியோக்களையும் வெளியிட்டார். இது நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் நிபுணர்களின் கருத்துக்களை கேட்டு அவற்றையும் வெளியிட்டார்.
இதேபோன்ற ஒரு நிகழ்ச்சியை தொடர்ந்து சமூக வலைதளத்தில் வெளியிட ராகுல்காந்தி திட்டமிட்டுள்ளார். அதாவது பிரதமரின் மான் கி பாத்துக்கு போட்டியாக இது வெளிவரும்.
அதில் அவருடைய உரை மட்டும் அல்லாமல் அவர் பங்கேற்கும் கலந்துரையாடல்களும் இடம்பெற செய்ய இருக்கிறது. இது விரைவில் வெளிவர இருப்பதாக கட்சி நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்.