காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி 
செய்திகள்

ஆரோக்கிய சேது செயலியால் அந்தரங்கம் பறிபோகும் - ராகுல்காந்தி கவலை

‘ஆரோக்கிய சேது’ செயலியால் பயனாளர்களின் பாதுகாப்பு மற்றும் அந்தரங்கம் பறிபோவதற்கு வாய்ப்புள்ளதாக ராகுல் காந்தி கவலை தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவலை தடுக்க, மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் ‘ஆரோக்கிய சேது’ என்ற செல்போன் செயலியை வெளியிட்டுள்ளது. இந்தச் செயலி, மக்கள் பயன்பாட்டிற்காக வெளியிடப்பட்ட 13 நாள்களுக்குள் 5 கோடிக்கும் அதிகமானோரால் தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில் ‘ஆரோக்கிய சேது’ செயலியால் பயனாளர்களின் பாதுகாப்பு மற்றும் அந்தரங்கம் பறிபோவதற்கு வாய்ப்புள்ளதாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கவலை தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT