ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் இந்திய விமானப்படையின் பயிற்சி நிகழ்ச்சி இரவு, பகலாக நடந்து வருகிறது. அதில், விமானப்படை தளபதி பி.எஸ்.தானோவா பேசியதாவது:-
தேசத்தின் பாதுகாப்பு சவால்களை சமாளிப்பதிலும், இறையாண்மையை பாதுகாப்பதிலும் விமானப்படையின் திறனில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம். அரசியல் தலைமை உத்தரவிட்டால் எந்த நேரத்திலும் உரிய பதிலடி கொடுக்க தயாராக இருக்கிறோம்.