புதுச்சேரி

முதலமைச்சர் ரங்கசாமியுடன் சந்திர பிரியங்கா திடீர் சந்திப்பு

சந்திரப்பிரியங்காவை நீக்க முதலமைச்சர் ரங்கசாமி கவர்னருக்கு பரிந்துரைக் கடிதம் வழங்கினார்.நீக்கப்பட்ட பின் சந்திரபிரியங்கா முதலமைச்சர் ரங்கசாமியை அவர் சந்திக்கவில்லை.

மாலை மலர்

புதுச்சேரி:

புதுவை மாநிலத்தில் என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.

புதுவை அமைச்சரவையில் பெண் அமைச்சராக என்ஆர்.காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சந்திரப்பிரியங்கா இருந்தார். கடந்த அக்டோபரில் அமைச்சரவையிலிருந்து சந்திரப்பிரியங்காவை நீக்க முதலமைச்சர் ரங்கசாமி கவர்னருக்கு பரிந்துரைக் கடிதம் வழங்கினார்.

அதை அறிந்த சந்திரப்பிரியங்கா தனது பதவியை ராஜினமா செய்வதாக அறிவித்தார். சந்திரப்பிரியங்கா பதவி நீக்கம் அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையாக பேசப்பட்டது. இந்த நிலையில், சந்திரப்பிரியங்கா தனது கணவரிடமிருந்து விவகாரத்துக் கோரி காரைக்கால் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ததாகவும் தகவல் வெளியானது.

நீக்கப்பட்ட பின் சந்திரபிரியங்கா முதலமைச்சர் ரங்கசாமியை அவர் சந்திக்கவில்லை. இந்த நிலையில், பதவியிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள்அமைச்சர் சந்திரப்பிரியங்கா நேற்று மாலை கோரிமேடு பகுதியில் உள்ள முதலமைச்சர் ரங்கசாமி வீட்டில் அவரைச் சந்தித்துப் பேசினார். இதுதொடர்பாக சந்திரபிரியாங்கவிடம் கேட்டதற்கு, "எனது தொகுதியில் உள்ள கோவில்களில் ஒருகால பூஜைக்கான காசோலை பெற முதலமைச்சரை சந்திக்க முடிவு செய்தேன். அதன்படி அவரது அலுவலகத்துக்கு சென்று ரங்கசாமியை சந்தித்தேன்.